நெருங்கி நெருங்கி
நீ வந்தாய் நிரந்தரமாக
என் நெஞ்சில் இடம்
கொண்டாயே மன்னவா
ஓ மன்னவா.................\
உரசி உரசி பேசி
மடியில் உறங்க
இடம் எடுத்தாயே
மன்னவா ஓ மன்னவா.....\
வண்ண மலர் சோலையிலே
உன் எண்ணம் அதை
முளுமையாகச் சொல்லவா
மன்னவா ஓ மன்னவா..........\
நடு இரவினிலே
நிலத்து நீரினிலே
தன் முகம் பார்க்கும்
நிலவும் நிழல் பார்த்து
ரசிப்பது போல் மன்னவா
நானும் நடு சாமத்திலே
உன் முகம் தேடி ரசிப்பேன்
என் இதயத்திலே
மன்னவா ஓ மன்னவா......\
மடியில் இடம் கொடுக்கவே
என் நாணம் தடை போட்டது
மன்னவா
நீ தலை சாய்த்ததுமே
தடையை உடைத்து இடம்
கொடுத்தேன் மன்னவா
ஓ மன்னவா...............\
உன் கட்டழகின் உடலிலே
என் விரல் கட்டெறும்பாக
ஊரவேண்டும் என்று நீ
கட்டளையிட்டதுமே இந்தப்
பெட்டை மயிலின் மனம்
பட்ட பாடு அறிவாயோ
மன்னவா ஓ மன்னவா.......\
எத்தனையோ கடமையாளிகளின்
கண்களிலே எதை தூவி விட்டு
டொக்கு டொக்கு குதிரையில்
கட கட என்று ஓடி வந்தாயோ
என்னைக் காணவே
மன்னவா ஓ மன்னவா................\
ஆல மரம் குடை பிடிக்க
புல் தரை பாய் விரிக்க
பள்ளி கொள்ள வந்தாயோ
மன்னவா ஓ மன்னவா.........\
நீ விரல் தொட்டதுமே
முதல் பாடம் கற்றுக்
கொண்டேன் மன்னவா
ஓ மன்னவா.............\
பள்ளி அறை தேவை பல
பாடம் படிக்கவே மன்னவா
வாத்தியாக நீ வர வேண்டும்
உன் பள்ளி அறைக்கு
என்னை அழைக்க வருவாயோ
மன்னவா ஓ மன்னவா............\
நீ மடி சாய்ந்தது போதும்
மன்னவா மாலை நெருங்கி
வந்து விட்டது சென்று வா
நீ சென்று வா மன்னவா
ஓ மன்னவா என் மன்னவா......\
No comments:
Post a Comment