ஒத்தையிலே நான் நிற்க
ஓரப் பார்வை பார்த்த
மச்சான்
ஒய்யார நடை
நடந்து தோப்புக்குப்
போகும் சின்ன மச்சான்
என் மேல் ஏனோ ஆசை
வச்சான்...!!!
ஆற்றங் கரையில்
நான் நிற்க அசட்டுச்
சிரிப்போடு வந்த மச்சான்
பக்கம் வந்து என்னைச்
சொக்க வச்சான்...!!
சந்தைக்குப் போகையில்
சாலை ஓரமாக நான்
நிற்க வண்டியோட்டி
வந்த மச்சான்ஏறிக்கோ
என்று கூச்சல் இட்டான்..!!
மறுத்துவிட்டேன் நான்
ஏறிக் கொள்ள இறங்கி
நின்றான் அவன் மெல்ல
வெடுக்கென நான் துடுப்பாக
நடக்க விருப்போடு மச்சான்
முறைச்சு நின்றான்...!!
ஆலயம் சென்று அடி
எடுத்து வைத்தேன்
ஆலய முன் அமர்ந்து
இருந்தான்...!!
தலை குனிந்தேன்
தட்டில் கொண்டு மலர்
வைத்தான் மச்சான்
வைத்தமலரை எடுத்து
சூடிக் கொண்டேன்
மயங்கி நின்றான்...!!!
மாதங்கள் பல என்னைச்
சுற்றி வந்து நாள் பார்த்து
மணம் முடித்தான்...!!
புதுமணப் பெண்ணாக
நான் புகுந்த வீடு சென்றதும்
முதலில் மச்சான் சென்று
அறைவாசலில் காத்து
நின்றான்...!!!
மல்லிகை மலர்கள்
மயக்க வாஞ்சணையோடு
என்னை அணைத்தான்
வெட்கப் பட்டு தட்டி விட்டேன்
பக்கம் இருந்த மின் விசிறி
கையைப் பதம் பார்க்க
கண்ணைத் திறந்தேன்
நடு இரவு இது திடிர் கனவு
ஆஹ ...ஆஹ கனவா.???
எனச் சிரித்தேன்...!!!!
No comments:
Post a Comment