நான் ஞானி இல்லை
யோகியும் இல்லை
ஆனால் அமர்ந்து
விட்டேன் மரத்தடியில்...!!!
நான் துரோகி இல்லை
பாவி இல்லை ஆனால்
ஒதிங்கி விட்டேன்
தனிமையில்...!!!!
வேதனையோ
சோதனையோ
என்னை விரட்ட
வில்லை ஆனால்
சோகமானேன்
நெஞ்சினிலே..!!!
காவியம் வடிக்கவில்லை
கவிதையும் எழுதவில்லை
ஆனால் தேடுகின்றேன்
தனிமையை...!!!!
சிற்பம் செதுக்க வில்லை
ஓவியம் வரையவில்லை
ஆனால்வளர்க்கின்றேன்
பலகற்பனையை....!!!!
தனிமையில் சிரிக்கின்றேன்
பல வாறு நடிக்கின்றேன்
ஆனால் ஏன் என்று
புரியவில்ல....!!!!!
இயற்கை காட்சியின்
நடுவில் இருக்கின்றேன்
ஆனால் எவையும் என்
கண்ணில் புலன்படவில்லை...!!!!
நாதத்தோடு அவன் முகத்தை
நினைக்கின்றேன்இப்போது
தென் படுகின்றது அவன்
புன் முறுவல் பூத்த
முகம்...!!!!!
காதல் கொண்ட பேதை
என் நெஞ்சில் கண் முன்
தோனுவது அத்தனையும்
வெறுமையாகவும்
மனக்கண் முன் தோனும் அவன்
முகமே காட்சி வடிவமடி...!!!!
No comments:
Post a Comment