Saturday 16 January 2016

ஆசைக் கனவு


விட்டெறிந்த பந்து
கடல்  நீருடன்
மிதந்து வந்து
கரையை மறந்து
மீண்டும் கடலின்
உள்ளே செல்வது
போல்............................\

உன்னைக் கண்டு
பயந்து நடுங்கி
ஓடிய ஆசை நீ
திரும்பிச்செல்கையிலே
உன் பின்னாடியே
வருகின்றது நில்லாமல்
உன்னைத் தேடியே
பெண்ணே.............................\

வருடி செல்லும்
வாடைக்காற்றை
விரட்டி விட்டு
வாட்டி எடுக்கும்உன்
மூச்சுக்காற்றுதான்
பிடிக்கின்றதடி
கண்ணே......................................\

ஆசை அது ஆசையடி
ஓசை கொடுக்காமலே
உசுப்பி எடுக்கின்றதடி
என்னை................................\

காசி கொடுத்து
வாங்கவும் காதலுக்கு
கடை இல்லை
விட்டெறிந்து விட்டு
காசிக்கு  சன்னியாசியாகப்
போகவும் மனம் இல்லை.......\

நூலகம்  நீயாக
வேண்டும் நான்
வாசிக்கவும் நேசிக்கவும்
சுவாசிக்கவும்
வேண்டும்................................\

இல்லறம் என்னும்
நல்லறம் காண
வேண்டும் கற்றுத் தரும்
ஆசானாக நான்
இருக்க வேண்டும்..............\

நீ வெட்கப் பட்டுக்
கொண்டே படிக்க
வேண்டும்  என்
வெள்ளைத் தமிழ்
படித்து விட்டு
பிள்ளைத் தமிழ்
கொடுக்க வேண்டும்
நீ  பரிசாகவே..........................\

அய்யய்யோ பரிசம்
போடும் முன்பே
பரிசு கேட்கின்றேன்
தனிமையிலே நின்றே....\

அடப்பாவி  உள் மனமே
சென்றவள் வரவில்லை
சிந்தனையிலே இத்தனை
திருவிளையாடலாடா.............?

உமக்கு!  போதுமடா மக்கு
கரம்  பிடிக்கும்  முன்பே
கட்டி  அணைத்து  தூக்கவும்
தூண்டுகின்றாயே நின்று என்
பாவி  மனமே........................................\

  

No comments:

Post a Comment