உன்னை விட
அழகு உன்
இமை தானடீ
உனக்கும் அது
பெருமையடீ...
அடிக்கடி துடிப்பது
போல் என்னை
அழைக்காமல்
அழைக்குதடீ.....
உன் இமைக்குள்
நான் விழியாக
வர மனசும்
தவிக்குதடீ....
அது முடியாது
என்பதால் உன்
இமை கொண்டு
நான் போர்வை
யாகப் போர்த்த
உன் அனுமதி
தேவையெடீ.....
குயிலுக்குப்
போட்டியாக
கருமை நிறத்தில்
இமை உனக்கு
மட்டும் ஏனடீ.....
உன் இரு இமையும்
இணைவது உயிர்
இணையாக
எனக்குத் தோனுதடீ.....
இணைந்த
இமை திறக்கா
விட்டால் அதுதான்
இறுதியடீ....
அப்போதும்
உனக்கு அது
அழகுதானடீ
நான் மட்டும்
ரசிக்காமலே
நின்று தவிப்பேனடீ...
No comments:
Post a Comment