Friday 1 January 2016

கொலுசு

அடியே ராகினி
அங்கே  ஏன் நின்று
விட்டாயோ....???
  அடடா
பார்த்து விட்டாயோ
வெள்ளிக் கொலுசை...??
நீ  சிணுங்கி என்னை
வதைப்பது போதாமல்
குழுங்கும் கொலுசும்
போட்டு கிரங்கடிக்கப்
போராயோடீ....?,,
சில்லறை இருக்கா
என்று கேட்காமலே
போட்டும் விட்டாயே டீ...??
உன் கெண்டைக்
காலுக்கு எடுப்பாக
உள்ளதடீ.....//
இவன் இரவு வேளை
தூக்கத்தில் உன்னை
கனவில் கண்டானோடீ.....???
கச்சிதமாக செய்து
இருக்கான் உன்
காலுக்கு அளவு 
கனவில் எடுத்தானோ டீ...???
நீ மெத்தைக்கு
வரும் போது
நித்தமும் விட்டு
வந்தால் நல்லதடீ......???
சத்தம் அது பெரும்
தொல்லையடீ.....//
  இசை பாடும் கொலுசே
என் அன்பை அள்ளிக்
கொள்ளவா அவள்
காலில்  பள்ளி
கொண்டாயோ வெள்ளிக்
கொலுசே...???,
     

No comments:

Post a Comment