Friday 8 January 2016

பக்தி

அசைக்க முடியாத நம்பிக்கையும்
பிரிக்க முடியாத பாசமும்
ஒரு பக்திதான் .....///

அள்ளிக் கொடுத்து கை சிவக்க.
பசித்தவனுக்கு பசிதீர்த்தால்
அதில் கிடைக்கும் முக்தியும்
திருப்தியும் ஒரு வகையில்
பக்திதான் ......//

செய்யும் தொழிலை
செம்மையாக நேசித்தால்
அதற்கும் மறு பெயர் பக்தி....///

பக்தி என்று தனிப்பட
இவையும் இல்லை
சுற்றியுள்ள அணைத்தையும்
ஒரு மனதோடு பார்த்து
ஒருமைப்பாட்டாக.
நேசிக்கும் ஒளியின்
தீயே பக்தி......////

விட்ட தவறை நினைத்து
வருந்தி பெற்ரோரின்
பாதம் பணிந்து பெறும்
ஆசியும் பக்தி ......////

இல்லறத்தை நல் முறையில்
நடத்தி துணையை தன்
உயிராய் போற்றி மாற்றான்
மனைவி மீது காமப்பார்வை
வீசாது நற்பண்போடு
நடந்தால் அவையும்
மனக்கட்டுப்பாட்டின் பக்தி .....///

தொண்டு தொட்டு வந்தது
இறை பத்தி அதை என்றும்
மறவாது தொடரவேண்டும்
என்பது புத்தியின் பக்தி .....///

பால் உற்றுவது பண்டங்கள்
படைத்தல் அனைத்தும்
மனிதனின் ஆத்மா திருத்தியே....///

உயிர் பலி கொடுத்தல்
தீப்பொறி மிதித்தல் எல்லாம்
புத்தி மான்கள் அவர்கள்
யுத்தியால் பரப்பி விட்ட பக்தி....///

மனசாட்சிக்குப் பயந்து
மனித நேயத்தோடு நடப்பவனுக்கு
அவன் நம்பிக்கைதான் பக்தியே....////

நம்மை மிஞ்சி ஒரு சக்தி உண்டு
அவை கண்ணுக்குப்
புலப்படுவதும் இல்லை
அவை பக்தி என்னும்
கோட்பாட்டை போட்டு
மதம் என்னும் பெயரில்
மனிதனை பிரிக்கவும் இல்லை .....///

படிப்போருக்கு தேவை
கல்வி மேல் பக்தி
உழைக்கத் துடிப்போருக்குத்
தேவை உழைப்பின் மேல் பக்தி
சாதிக்க. நினைப்போருக்கு
தேவை நம்பிக்கை மேல் பக்தி
எதுவானாலும் தாங்க முடிவு
எடுப்போருக்குத் தேவை
தன் உடல் மேல் பக்தி...../////
இவைகளை மீறி பக்தி
எங்கே உண்டு..???

No comments:

Post a Comment