Tuesday, 26 January 2016

பசுமை

இயன்ற வரை
இயற்கையைக்
காப்போம்
செயற்கையைக்
குறைப்போம் ...!

இயற்கையின்
நடுவே நின்று
இழுத்து விட்டுப்
பார்  மூச்சி
கொடுக்கும்
புத்துணர்ச்சி ..!

விருந்தோ
மருந்தானது
அன்று ஒரு காலம்
மருந்தோ விருந்தாகப்
போனது இக் காலம் ...!

இயற்கை  எழில்
காட்சியை
தொலைக்காட்சியில்
பார்க்கும் போது
மனதிலே எழும்
ஒரு தாக்கம் மறு
நிமிடம்  மறந்து விடும்
அதை மனித. மனம்..

காட்டை வெட்டி
வீட்டை நட்டுவிடுவான்
பச்சைப்புல்லை மறைத்து
நடை பாதையை அமைத்து
விடுவான் கண்ணுக்கு
எட்டிய தூரம் வரை
கட்டிட மாயமே ..

நில நடுக்கம்
வந்துவிட்டால்
காணாமல் போகின்றது
மாயமாய்.

வீட்டுக்கு வீடு மரம்
வைப்போம்
நாளைய சமுதாயத்தின்
நெஞ்சினிலும் இதை
விதைப்போம்
இயற்கை  சீற்றத்துக்கு
தடை விதிப்போம்
இயன்ற வரை உலகை
காப்போம்.

நட்ட மரத்தின் வேர்
நிலதைக் காக்கும்
வளர்ந்த மரத்தின்
கிளை சூரிய
வெப்பத்தை தடுக்கும்
மரத்தின் இலையின்
பயனால் விவசாயிகளின்
கண்ணீர் துடைக்க மழை
கிடைக்கும்.

தூமைக் காற்று உலகை
சுத்தும்  ஆரோக்கிய
வாழ்வில் மக்கள்
இன்பம் தளிக்கும்.

இயற்கை உணவோடு
உடலுக்கு மருந்தும்
சேர்ந்தே கிடைக்கும்
இயற்கை  உரத்திலே
தானியம் விளைந்தால்.

இயற்கையை பேணுவோம்
செயற்கையை மாற்றுவோம்.

      

No comments:

Post a Comment