ஓ ...நெஞ்சே மன்னித்து விடு என்னை
பொய்யான அன்பு என்று அறியாமலே
விதைத்து விட்டேன் உன்னிடத்திலே ..
நீ அறுத்து எறி என்று கூறும் போது
மறுப்புக்காட்டும் என் மனதையும்
மன்னித்து விடு ...///
நம்பிக் கெட்டது மனம் இன்னும்
நம்பிக் கொண்டு இருக்கு விட்டு விடு.
நச்சரித்துப் பார்த்தேன் எச்சரித்துப்
பார்த்தேன் வச்ச குறி மாறாது என்று
விழியிரெண்டும் அடம் பிடிக்கிறது
அதையும் மன்னித்து விடு.
நாள் கடந்தாலும் அந்தக் குரல்
ஒலியை கேட்க நான் காத்திருப்பேன்
என்று செவிகளும் விடாப்பிடியாக
இருக்கிறது அதையும் மன்னித்து விடு.
கடுகு அளவும் நான் வெறுக்க வில்லை
மலையாக நம்பிவிட்டேன் என ஆழ்
மனம் தலை கீழாக இருக்கின்றது அதையும்
சேர்த்து மன்னித்து விடு.
அவன் பெயர் கூறியபடியே
துடிக்கும் இதயம் அவனை மறந்தால்
துடிப்பை நிறுத்தி விடுவேன் என்று
எச்சரிக்கை செய்கின்றது அதையும்
மன்னித்து விடு.
என் ஜீவன் அவன் இல்லம் நாடி
புறப்பட்டு வெகு மாதம் இன்னும்
வீடு திரும்ப வில்லை அதையும்
மன்னித்து விடு.
உப்புக் கடல் போல் கண்ணீரில்
நான் மாண்டாலும் சத்தியமாக
மறவேன் அவனை என்பதை
இன்று புரிந்து கொள் ..
பொய்யான
அன்பு நான் வைக்கவில்லை என்று
புரியவைத்து விடு நீ அறுபடை
செய்யும் நோக்கை நிறுத்தி விடு
அவனின் அன்பை இங்கே
இழுத்து விடு,
No comments:
Post a Comment