புதுவருடம் 
தொடங்கியது 
மகிழ்ச்சியாக.
பொங்கல்
பொங்கியது
இகழ்ச்சியாக.
ஆனால் உன்
மௌனம் மட்டும்
தொடர்கின்றது
தொடர்ச்சியாக.
என் மனமோ
தினமும்
எனக்குள்ளே 
கொடுக்கின்றது
கவலை மேல் 
கவலையாலே
கொடைச்சல்களாக.
புது  உடைமை
புது தென்பு
புது உறவு உண்டு 
புதுமை கண்ட பின்னும்
புரட்டிப்போடுது மனம்
உன் சின்ன முகத்தின்
புகைப்படம்  கண்டு.
புரம் தள்ளி பேச வில்லை
நான் புரக்கணித்து
நடக்கவில்லை
புரிந்து கொள்ள உமக்கு
புது வருடமும்  உன்
மனதை திறக்கவில்லை.
வருடி எடுக்கிறது
உன் நினைவு
வாட்டி எடுக்கிறது
உன் நினைவு
கவலையை கூட்டி
விடுகிறது
 உன் நினைவு.
உன்னிடம் காட்டிக்
கொடுக்க. மறக்கின்றது
என் பயந்த மனமது .....///
 
  
No comments:
Post a Comment