என்னோட செல்லத்தை
தொலைத்து விட்டேன்.
தொலைத்த இடம்
பள்ளமோ வெள்ளமோ
நான் அறியேன் .........////
வீசிய புயல் வேகமாக
இழுத்துச் சென்றதோ
கொட்டிய மழை நீர்
புரட்டிக் கொண்டு
அலையோடு இணைத்து
விட்டதோ காணாமல்
தேடுகின்றேன் கண்ணீரால்
வலை வீசுகின்றேன் ........//////
கண்டு பிடிப்போருக்கு
கொண்டு தருவேன் பரிசு.
அங்க அடையாளம் அவசியம்
தங்கு தடை இன்றி சொல்ல
முடியாத ரகசியம் ........////
வால் இல்லை கால் உண்டு
தலை மேலே முடியுண்டு
காந்தக்கண்ணிரெண்டு
கடுப்பாகும் குணம் உண்டு ...///
அதற்காக அடுப்பங்கரை
பக்கம் தேடாதீர்கள்
அடுப்புக்கும் செல்லத்துக்கும்
எவ்விதமான தொடர்வும்
இல்லை ......./////
புடலங்காய் உருவம் இல்லை
பூசணிக்காய் வயிறும்
இல்லை .....////
பாசமிக்க உள்ளம்
பயமுறுத்தும் தோற்றம்
வேற்று மொழியில்
இல்லை நாட்டம்
தேன் தமிழை சுவைக்கும்
பிள்ளை .......//////
விரைவாக கண்டு பிடியுங்கள்
மலிவான பரிசுப் பொருளை
பெற்று செல்லுங்கள்
அன் நாள் செல்லம் போல்
என் நாளும் திருந்தி வரச்
சொல்லுங்கள் ......//////
No comments:
Post a Comment