ஆண்<><ஆற்றிலே தூண்டல் போட்டு
அதில இரண்டு மீன் பிடித்து
ஆசையோடு==கொண்டு
வந்தேன் என் பொன்னம்மா
இதைச் சோக்காக ஆக்கிப்
போடு பொன்னம்மா..!!!!!
பெண்<>< வீட்டிலே பெண்பிள்ளைக்கு
ஒரு நகையும் இல்லாமல்
பூட்டி வைக்கும் மச்சானே
உனக்கு அவித்து=அவித்துக்
கொட்ட என்னால் ஏலாது
என் சின்ன மச்சானே..!!!
ஆண்<><என்னடி=சொன்னாய் எனக்கு
கெட்ட கோபம் வருகின்றது ..!!!
பெண்<>> வார கோபம் தன்னாலே
அடங்கிப் போகும் என்னை
நீங்க மிரட்டாதீங்க...!!!
ஆண்<><கண்ணான கண் மணியே
என் கட்டழகுப் பெட்டகமே
என் ஆசை பெண்ணே
பொன்னம்மா=போதுமடி
உன் விவாதம் என்
வயிறும் பசிக்குதடி என்
உடலும் நடுங்குதடி..!!!
பெண்<>< என் ஆசை மச்சானே என்
அன்பு மச்சானே ஏங்க
என் சின்னமச்சானே
இதோ ==இதோ அரநொடிதான்
ஆக்கிப் போடுகின்றேன் என்
செல்ல மச்சானே...!!!!
ஆண்<><அப்படிச் சொல்லடி என்
தங்கம் மீனைத் தூக்கிப்
போட்டு அறுத்துத் தாறேன்
கொண்டு வாடி அருவாள...!!
பெண்<><எடுங்கோ=எடுங்கோ மச்சான்
நான் இடிக்கபோகின்றேன்
பட்ட மிளகாய் =காரசாரமாக
ஆக்கித் தாறேன் =மச்சானே...!!
ஆண்<><ஏய் புள்ள=ஏய் புள்ள
ஓடி வாயென்..!!!
பெண்<><> என்ன மச்சான்.=
என்ன மச்சான்...!!
ஆண்<<>மீனுக்குள்ளே மோதிரம்
ஒன்று மின்னுது பார்
அந்த வானத்து மின்னல்
போல் என் கண்ணைப்
பறிப்பதைப் பார் புள்ள..!!
பெண்<><அப்படியா=அட ஆமாம்
ஐயோ மச்சான் அடிச்சது
அதிஷ்ரம் மச்சானே....!!
(ஆண்
பெண்) ஆஹ==ஆஹ=இன்று
நாம் தான் ராஜா வாங்கோ
போவோம் விக்க =எடுப்பான
துணியும் குடிக்க =போத்தலும்
இது போதும்==இது போதும்
நமக்கு=ஹாஹா ஆனந்தம்
ஆனந்தமே...!!!
No comments:
Post a Comment