Sunday 17 January 2016

தாக்கம் கொடுத்த கனவு

கோடிஸ்வரன்  வீட்டுப்
பொண்ணுக்கு
சிங்கை நாட்டு
மாப்பிள்ளையாம்
சீர் வரிசைகளை
சிக்கல்  இல்லாமல்
போட்டு வந்தானாம்.......///

திக்கு வாய் கோடிஸ்வரன்
தினறிப் போய் அமர்ந்தாராம்......///

தங்கத்தை அளக்கச் சொன்னான்
வெள்ளியால் வீட்டை நிறப்பச்
சொன்னான்  மெத்தைக்கு
அடியில் நித்தமும் பணம்
தூங்கவேண்டும் என்றான்.....////

வடக்கு திசையிலே வாழை
தோப்பை விலை பேசச்
சொன்னான்
தெக்குத் திசையில் தென்னம்
தோப்பு எத்தனை ஏக்கர்
என்று வினா எழுப்பி நின்றான்.......////

மேக்குப் பக்கம் மாந் தோப்புக்கு
இடம் ஒதுக்கச் சொன்னான்
கிழக்குப் பக்கம் விளக்காக
சூரியனை நிறுத்தச் சொன்னான்
குடிக்க பழரசம் பல கேட்டான்
குளிக்க பன்னீர்  குளம்  திறக்கச்
சொன்னான்........////

பறக்க விமானம்  கேட்டான்
இறங்க முற்றத்தில் இடம்
கேட்டான்  உறங்க வெண்
மேகத்தை கேட்டான் சுவர்
எங்கும் நட்சத்திரத்தை ஒட்டச்
சொன்னான்.......////

வாய் அடைத்துப் போன
பெண்ணின் தாய் தாங்கி
பிடித்தாள் ஏங்கியவாறு
திக்குவாய்  கோடிஸ்வரக்
கணவனை........////

விட்டு விடுவோம் என்று
எடுத்துரைத்தும் விளக்கம்
அளித்தும்  மகள் மறுத்து
விட்டாள் எடுப்பான மாப்பிள்ளை
என்று கை கோர்க்க துணிந்து
விட்டாள் .......////

தலை சுற்றி மயக்கம்
போட்டது கோடிஸ்வரனுக்கு
ஓ. வென்று அழுதான்
சத்தம் கேட்டு மனைவி எழுந்து
மின் விளக்கை போட்டாள்......///

திக்குவாயால் தினறிய
படியே தான் கண்ட கனவு
என புரிந்ததும்  கனவை
சொல்லி முடித்தான்  தன்
கருவில் இருக்கும் மகளை
கரம் கொண்டு தடாவினாள்
அந்த அன்னை கணவனை
நோக்கிய வாறு .........../////

    

No comments:

Post a Comment