கோடிஸ்வரன் வீட்டுப்
பொண்ணுக்கு
சிங்கை நாட்டு
மாப்பிள்ளையாம்
சீர் வரிசைகளை
சிக்கல் இல்லாமல்
போட்டு வந்தானாம்.......///
திக்கு வாய் கோடிஸ்வரன்
தினறிப் போய் அமர்ந்தாராம்......///
தங்கத்தை அளக்கச் சொன்னான்
வெள்ளியால் வீட்டை நிறப்பச்
சொன்னான் மெத்தைக்கு
அடியில் நித்தமும் பணம்
தூங்கவேண்டும் என்றான்.....////
வடக்கு திசையிலே வாழை
தோப்பை விலை பேசச்
சொன்னான்
தெக்குத் திசையில் தென்னம்
தோப்பு எத்தனை ஏக்கர்
என்று வினா எழுப்பி நின்றான்.......////
மேக்குப் பக்கம் மாந் தோப்புக்கு
இடம் ஒதுக்கச் சொன்னான்
கிழக்குப் பக்கம் விளக்காக
சூரியனை நிறுத்தச் சொன்னான்
குடிக்க பழரசம் பல கேட்டான்
குளிக்க பன்னீர் குளம் திறக்கச்
சொன்னான்........////
பறக்க விமானம் கேட்டான்
இறங்க முற்றத்தில் இடம்
கேட்டான் உறங்க வெண்
மேகத்தை கேட்டான் சுவர்
எங்கும் நட்சத்திரத்தை ஒட்டச்
சொன்னான்.......////
வாய் அடைத்துப் போன
பெண்ணின் தாய் தாங்கி
பிடித்தாள் ஏங்கியவாறு
திக்குவாய் கோடிஸ்வரக்
கணவனை........////
விட்டு விடுவோம் என்று
எடுத்துரைத்தும் விளக்கம்
அளித்தும் மகள் மறுத்து
விட்டாள் எடுப்பான மாப்பிள்ளை
என்று கை கோர்க்க துணிந்து
விட்டாள் .......////
தலை சுற்றி மயக்கம்
போட்டது கோடிஸ்வரனுக்கு
ஓ. வென்று அழுதான்
சத்தம் கேட்டு மனைவி எழுந்து
மின் விளக்கை போட்டாள்......///
திக்குவாயால் தினறிய
படியே தான் கண்ட கனவு
என புரிந்ததும் கனவை
சொல்லி முடித்தான் தன்
கருவில் இருக்கும் மகளை
கரம் கொண்டு தடாவினாள்
அந்த அன்னை கணவனை
நோக்கிய வாறு .........../////
No comments:
Post a Comment