பாப்பா தட்டி சுட்ட புட்டு
தேங்காய் சுரண்டி எடுத்த
சுரட்டை கொண்டு சுட்ட புட்டு
ஈர மண்ணை தொட்டு எடுத்து
சுட்டாள் இரண்டு புட்டு ...///
துட்டுக்கு கூவி விற்கிறாள்
அதை வாங்கும் படி அன்னையிடம்
அடம் பிடித்து நின்கிறாள் ....//
துட்டைக் கொடுத்து பெற்றுக்
கொண்டாள் அன்னை
அதை உண்டு சுவையைக்
கூறும் படி குதித்து
அழுகிறாள் பாப்பா .......///
தன் மழலையின் அழுகையை
முடிவுக்குக் கொண்டு வரவே
ஈர மண்ணை எடுத்து வாயிலே
போட்டாள் அன்னை
ஈர மண்ணை விட தாய் உள்ளம்
ஈரமானது என்று அறியாத மழலை
சிரித்து மகிழ்கின்றாள்
அன்னையை
அணைத்து தோளிலே
தொங்கி மகிழ்கின்றாள்
அன்பு முந்தம் பதித்து
மகிழ்கின்றாள் பாப்பா
தன் பிட்டை தாய்
உண்டது கண்டு
பத்து மாதம் சுமந்த தாய் மனம்
பூரிப்புக் கொள்கின்றது நின்று.....//
No comments:
Post a Comment