Friday 22 January 2016

புரிந்து கொள்ளுங்கள்

கையோடு கை கோர்த்து
தோளோடு தோள் சேர்த்து
தலையோடு தலை முட்டி
கன்னத்தோடு கன்னம்  ஒட்டி
இடையோடு இடை அணைத்து
புகைப்படம்  எடுப்பது தவறு
இல்லை.......////

அது அன்பின் பரிமாற்றம்
உறவின் வெளிப்பாடு
ஆனால் தமிழனுக்கு என்று
ஒரு பண்பாடு இருப்பதை
மறந்து நடப்பதுதான் பெரும்
குற்றம் ......./////

ஆணும் பெண்ணும் நட்பூ
ரீதியில் அன்பை பொழிவதில்
தப்பு இல்லை வரவேற்கத்தக்க
ஒரு விஷயம் அந்த நட்புக்கும்
அன்புக்கும் இடையில் ஒரு வம்பு
நுழைய இடம் விடாது நடந்து
கொள்வதுதான் பாராட்டத்தக்க
நிகழ்வு ......///

அவதூறு பேசுவோரையும்
வம்பு தும்பு வார்த்தைகளில்
பதிவுகள் போடக்
காத்திருக்கும் பல
நல்ல மனிதர்களையும்
தூபம் போட்டு வா என்று
அழைப்பது போல் ...///

சிலர் புகைப்படங்களை
முகப் புத்தகத்தில்
பதிவு செய்வது தான்
வேதனைக்குரிய
செயலாக அமைகிறது....///

முகப் புத்தகம் 
என்பது திறவு கோல்
இல்லாதா நூலகம் நம்
பக்கத்தை மூடிய
பின்னும் உள்
நுழைந்து மேய்ந்து
வர முடியும்
வேறு ஒருவரால்
என்பதை நினைவில்
கொள்ளுங்கள்.....////

பார்த்து பார்த்து நீங்கள்  எடுத்து
பதிவு செய்த
புகைப்படத்தை பதுங்கி
பதுங்கி போய்
திருடுவான் ஒருவன் ....///

போலி முகப்பு திறந்து
சாட்டை போல்
வார்த்தையால் பதிவு
போட்டு உங்கள்
படத்துடன் உலா
விடுகின்றான் சத்தம்
இல்லாமலே.....///

அதிலே கார சாரமாகவும்
கேலி கிண்டலாகவும்
கருத்துக்கள் அலை
மோதுகின்றது
தெளிவாகவே அதை
இன்னும் அறியாத
அப்பாவிகளா நீங்கள்......///

அப்பாவையும்
மகளையுமே தப்பாக
பார்க்கும் உலகமடா ....//

இன்னொருவன்
துணைவியான
பின்னே இதை சொல்லிக்
காட்டியே இல் வாழ்வு
நரகமாக போகுமடா....///

உன் சொர்க்க
வாழ்க்கைக்கு கொள்ளி
வைப்பது போல்  நீ
இப்போது சொக்கி
சொக்கி
புகைப்படங்களை
சொரிய விடாதே
பெண் மயிலே....///

பக்கம் பக்கமாக
விமர்சனங்கள்
ஓடுகின்றது
கண்ணை உருட்டி
புரட்டி படித்துப் பார்
கண்மணியே.....////

சொல்ல சொல்ல
கசக்கும் என் மேல்
வெறுப்பும் பிறக்கும்
சொல்ல வேண்டியது
என் கடமை...///

ஏன் என்றால்
நானும் உன்னைப்
போல் ஒருத்தியே
பெண்ணுக்கான
பாசத்தின் பதிவே ராசாத்தி.....////

No comments:

Post a Comment