Friday 1 April 2016

ஏங்கும் உள்ளம்

சின்னச் சின்ன கவிதைகளினாலே
உன்னிடம்  சொல்ல நினைத்த
வார்த்தைகளை  எல்லாம்  சொல்லிச்
சொல்லி வந்தேன் .,.....///

சில்லறை போன்ற சிரிப்பையும்
சேர்த்தெழுதினேன்.  சிதறிப் போன
சந்தோஷத்தையும் கொட்டி எழுதினேன்......///

உன்னை சேர்த்தணைக்கத்
தவிப்பதையும் இணைத்தெழுதினேன்
உன் நினைவால் நான் காணும்
இன்பக் கனவையும் கலந்தெழுதினேன்.....////

காவியமாக வேண்டும் நம் காதல்
என்னும்  வார்த்தையை விரிவாக
எழுதினேன்.வரி வரியாக எழுதினேன்......////

அத்தனையும் நீ படிப்பாய் என்று
முத்து மாலை போல் கோர்வையாக
எழுதினேன் கண்டும் காணாது
நகர்ந்து விடுகின்றாயா?  படித்தவுடன்
மறந்து விடுகின்றாயா?  விடை அறிய
ஏங்குது இந்த பேதை உள்ளமடா............//////

               

No comments:

Post a Comment