சின்னச் சின்ன கவிதைகளினாலே
உன்னிடம் சொல்ல நினைத்த
வார்த்தைகளை எல்லாம் சொல்லிச்
சொல்லி வந்தேன் .,.....///
சில்லறை போன்ற சிரிப்பையும்
சேர்த்தெழுதினேன். சிதறிப் போன
சந்தோஷத்தையும் கொட்டி எழுதினேன்......///
உன்னை சேர்த்தணைக்கத்
தவிப்பதையும் இணைத்தெழுதினேன்
உன் நினைவால் நான் காணும்
இன்பக் கனவையும் கலந்தெழுதினேன்.....////
காவியமாக வேண்டும் நம் காதல்
என்னும் வார்த்தையை விரிவாக
எழுதினேன்.வரி வரியாக எழுதினேன்......////
அத்தனையும் நீ படிப்பாய் என்று
முத்து மாலை போல் கோர்வையாக
எழுதினேன் கண்டும் காணாது
நகர்ந்து விடுகின்றாயா? படித்தவுடன்
மறந்து விடுகின்றாயா? விடை அறிய
ஏங்குது இந்த பேதை உள்ளமடா............//////
No comments:
Post a Comment