Friday 22 April 2016

ஊனப் பெண்

மதி அழகி என்றான்
மயங்கிப் போனேன்
விழி அழகி என்றான்
கிறங்கிப் போனேன் .

பொடலங்காய் கை அழகி என்றான்
நான் மெதுவாகத்  தொட்டுப் பார்த்தேன் .

கடலோரமா இருக்கும் திறந்த சிப்பி
போல் வாய்  அழகி என்றான்
என் இதழைக் கடித்தேன் .

கோலிக் குண்டு கண் அழகி என்றான்
கண்னை நானும் அங்கும் இங்கும்
உருட்டிப் பார்த்தேன் .

மீனாச்சிஅம்மன் போல் மூக்கு அழகு என்றான்
மெதுவாகச் சிரித்தேன் .

என் சிரிப்பைப் பார்த்து அடடா இந்தப்
பல்  வரிசையைப் பார்த்த பின்தான் சோளன்
வரி தவறாமல் விதை பதிக்கின்றதோ என்று
கேலியாக் கேட்டான் .

வெட்கம் கொண்டு நச்சென்று தும்மியும்
விட்டேன்
அப்போது அவன் ஆஹ இது அத்தனையும்
உண்மை என்பதை தும்மல் சொல்கிறதே என்றான் .

அவன் பழமையான. சிந்தனையைப்
பார்த்து உள்ளம் பூரித்தேன்
நைஸ்சாக என் விரலைக் கடித்தேன்

அய்யய்யோ. எங்க வீட்டுத் தோடடத்து
வெண்டைக் காய் போல் அல்லவா
இருக்கின்றது உன் விரல் என்று பொய்யான
புகழ் பாடினான் .

ஆசையின் பக்கம் என் மனம் எட்டிப் பார்த்தது
மொத்தத்தில் நிலாப் பெண் தத்தெடுத்த
பெண் நீ என்றான் .

என் மனம் தாவத்தான் செய்தது
என்னை அவன் வர்ணித்த விதம் பார்த்து
ஆயிரம் ஆயிரம் ஆசை பூக்களாக மலர
ஆரம்பித்த பின்தான் .

அவன் கண்ணில் பட்டது என் கால்
அரை குறைக் காலைப் பார்த்ததும்
மெதுவாக திரும்பி மௌனமாக  முகம்
சுழித்து  நின்றான் .

அப்போதுதான் எனக்கும் நினைவு வந்துவிட்டது
நாம் நொண்டி அல்லவா என்று என் காலைப் போல்
மனமும் ஊனமாக இருந்து இருந்தால்
நகராமல் இருக்கும் .

ஆனால் அது நகர்ந்து விட்டதே காதல் கடல் வரை
உடலை ஊனமாகப் படைத்த கடவுள்
உள்ளத்தையும் ஊனமாகப் படைத்து
இருந்தால் சில நொடிக்கு முன் நான் ஏமாந்து
இருக்க மாட்டேன் .

போலியான உலகத்தில் நிலை இல்லாத
அழகுக்குத்தான் மதிப்பு  உள்ளத்துக்கு
இல்லை சிலருக்கு உடலை நன்றாகப் படைத்து
உள்ளத்தை ஊனமாக்கி விட்டான் ஆண்டவன் 
எனக்கோ அங்கத்தை ஊனமாக்கி விட்டான்
இனிமேல் நான் ஆசையை  ஊனமாக்கி விட்டால் 
ஏமாற்றம் காண்பதேன் உள்ளம் .

        

No comments:

Post a Comment