Thursday 7 April 2016

இன்னும் திருந்தவில்லை பச்சோந்திகள்

உலகம் எங்கும் வறட்சி  நிலவுகின்றதாம்.
நிலமெல்லாம் வறட்சி தாங்காமல் விரிந்து
வெடிப்பு விழுகின்றதாம் இது வானிலை
அறிவிப்பு.

ஆனால் தமிழ் நாட்டிலே வெள்ளம்
ஊற்று எடுத்து ஓடுகின்றதாம்  அவை
மழை நீர் சொட்டியதால் இல்லை
அரசியல்வாதிகளின் கண்ணீர்
கொட்டியதனாலேயாம்.

ஏன் என்று கேட்காதீர்கள் பதில்
கேட்டால் அடைந்து விடுவீர்கள்
திகைப்பு  அல்லது வியர்ப்பு அண்டை
நாடான இலங்கை  மக்களின் அழிவை
நினைத்து இன்று அழுகின்றதாம் இந்த
நல்ல உள்ளம் கொண்ட குள்ளநரிக்கூட்டம் .

தேர்தல்  பிச்சை எடுக்க தயாரானால்
கையில் எடுக்கும் பிச்சைப்பாத்திரம்
இலங்கை  மக்களின் கூப்பாடு கட்சி
மாறி கட்சி  குற்றம்  சுமத்துகின்றார்கள் .
இலங்கை மக்களை ஏமாற்றி விட்டதாக

மொத்தத்தில் தமிழ்நாட்டு அரசாங்கத்தையே
இலங்கை  மக்கள் எதிரியாக பார்க்கின்றது
என்றால்  ஒப்புக்கொள்ள மறுக்கின்றது
அவர்கள்  மானம் கெட்ட மனம்.

பத்திரிகை படிக்க முடியவில்லை
இலங்கை மக்களைப் பற்றி பக்கம்
பக்கமாக பேட்டி அழுத கண்ணீர்
துடைப்பது போன்று  புகைப்படம் வேறு
தீ  மூட்டி  எரிக்கவே துடிக்கின்றது  நெஞ்சம்
இந்த பச்சோந்திகளின் பாசாங்கைப்
பார்க்கையிலே .

     

No comments:

Post a Comment