Friday 1 April 2016

என் கண்ணீருக்கு என்ன பதில்

புது இல்லம்  மாற்றி மாற்றி  
குடி புகுந்து வாழ்வது போல்
மனிதா நீ உள்ளம்  மாறி மாறி
இன்பம் தேடுவது நியாயமோடா?

கூட்டை விட்டு கூடு மாறும்
குருவியும் கூட்டமாகப்
போகின்றதடா.

மனிதனுக்கோ மூச்சு விட்ட
பின்னே தன் கூடு மட்டுமே
போகுதடா.

உடலை நம்பி வாழும்
உயிருக்கோ மூச்சுதான்
உறுதுணையடா.

இழுத்து விடும் மூச்சு வர
மறுத்தால் வருந்தியும் பயன்
இல்லையடா.

இதை அறிந்தும் ஆசையில்
விழுவதாலே தொடர்வதோ
தொல்லையடா.

இருந்தும் நீ உள்ளம் மாறி
உள்ளம் இன்பம் தேடி ஓடுகின்றாயே
இவை உமது மடமையடா. 

நட்பு என்னும் பெயரில் உடைந்த
கண்ணாடி போல் வாழும்
வாழ்கை எதற்கடா.

ஓடிவந்து உதவா நட்பு
உறுதியாகுமோடா.

உண்மை என நடிக்கும் போலி
வாழ்கை தேவையோடா.

அன்பை நாடி நெருங்கும்
உள்ளத்தை நொறுக்குவது
மனிதனுக்கு உரிய செயலோடா .

அன்பான வார்த்தை ஆயிரம் 
கவலைக்கு மருந்து என்று நீ
அறியவில்லையோடா.

உன் பேச்சு எல்லாம்
பொய்யாகிப் போகின்றதே
இது நியாயமோடா.

உண்மை அன்பு உன்  உள்ளத்தில்
ஊற்றெடுத்தால் உன்னை
மகான் என்று போற்றுவேனடா.

நான் பெற்ற வரம் என்று
மகிழ்வேனடா
உன் வாழ்த்துப் பாடுவேனடா.

நாள் தோறும் உன் உள் நான்
என் உள் நீ என்ற எண்ணத்தோடு
வாழ்ந்து மடிவேனடா.

                  

No comments:

Post a Comment