Friday 1 April 2016

சாலை

சாலை திருத்தம்  கொண்டால்
சாலை ஓரமாக சென்று விடும்
சாக்கடை  நீர்.

சாலைப்பணி படுத்து விட்டால்
சாலையின் மேல் தேங்கி நிற்கும்
சேத்து நீர்.

வாசனை  தெளித்து உடை தரித்து
சென்றாலும் சேத்தில் மிதித்து
செருப்பால் நீரை அழைத்து

உடையை நனைத்துச் செல்வது தான்
தொடர்ந்து நடக்கப் போகின்றது
நடை பாதையிலே.

   

No comments:

Post a Comment