யம்மா  ராகினி அங்கே  ஏன் நின்று விட்டாயோ  
அடடா பார்த்து விட்டாயோ வெள்ளிக் கொலுசை.
நீ சிணுங்கி என்னை வதைப்பது போதாமல்
குலுங்கும் கொலுசும் போட்டு கிரங்கடிக்கப்
போராயோடி .
சில்லறை இருக்கா என்று கேட்காமலே
போட்டும் விட்டாயோ உன் கெண்டைக்
காலுக்கு எடுப்பாக உள்ளதடி....
இவன் இரவு வேளை தூக்கத்தில் உன்னை
கனவில் கண்டானோடி...
கச்சிதமாக செய்து இருக்கான் உன் 
காலுக்கு அளவு  கனவில் எடுத்தானோ.
நீ மெத்தைக்கு  வரும் போது  நித்தமும் 
விட்டு வந்தால் நல்லதடி....
சத்தம் எனக்கோ அது பெரும் தொல்லையடி..
 இசை பாடும் கொலுசே என் அன்பை அள்ளிக்
கொள்ளவே  அவள் காலில்  பள்ளி  கொண்டாயோ 
வெள்ளிக்  கொலுசே நீ சொல்லு கொலுசே .
 
No comments:
Post a Comment