Sunday 24 April 2016

துணிந்தேன்

கொஞ்சம் சோர்வு எடுத்தது என் நெஞ்சம்.
வஞ்சம் கொண்ட வார்த்தைகலோ உரமிட்டு
தூக்கி விட்டது இன்று.

விடியும் வரை இடி இடிப்பதுபோல் துடி துடிக்கிறது
பல சொற்கள் கவிதைகலாக வந்து.

எனக்குள்ளும் புயல்  அடிக்கும் என்று
உணரவைத்துச் சென்றது நன்று.

தொடர்ந்து கையில் எடுப்பேன் நான் என்றும்.
வெறும் வாய் மென்று வருவோருக்கு
நெருப்பாகப் பதில் கொடுப்பேன் நான்
எதிர்த்து நின்று.

வெள்ளாட்டுக் கூட்டத்திலே குள்ளநரி
நட்பூக்களே  அதை அடையாளம் கண்டு
அறுத்தெறி இனி என் சொல்லிலே பறக்கும்
தீப் பொறி.

ஆதங்கத்தின்  அரங்கத்தை தினமும்
அரங்கேற்றம்  செய்யப்போவதோ இனி 
என்  கரங்கள்  இது ஈயச்சுரங்கமடா
உன் இழுக்கான பேச்சு உருக்குலையுமடா.

என் இறுக்கமான முகமும் வறுத்தெடுக்கும்
வார்த்தைகளும் உன் கழுத்தை நெரிக்குமடா.

சொல்லாலே உனை அடித்து செல்லாக்காசு
போல் உனை மாற்ற புறப்பட்ட சொல்லாடல்
பெண் நானடா....../////

                  

No comments:

Post a Comment