உடலுக்கும் உணர்ச்சிக்கும் தான் வயது ஆகி விட்டது
அன்புக்கும் காதலுக்கும் இன்னும் வயது இருபதுதான் .
இந்த ஜோடிக்கு அழகுக் கோலமாக கை கோர்த்து
போனது ஒரு காலம் அன்போடு கை பிடித்துப்
போகின்றனர் இந்தக்காலம் .
தடு மாற்றத்திலும் தன் தடியை விட கணவந்தான்
பலம் என்று ஒரு கை கொண்டு பிடித்தாரோ
இல்லை தன் கணவர் தடுமாறி விழுந்து
விட்டால் என்று தானும் பிடித்துக் கொண்டாரோ .
உணர்ச்சியை விரட்டி உணர்வுக்கு மதிப்புக்
கொடுத்து அன்புக்குள் புதையுண்டு துணைக்கு
துணையென இருவரும் தன் நம்பிக்கையோடு
தனிமையில் வாழும் தம்பதியர் இவர்கள் .
இதுதான் காதலா என்று கேட்பவர்கள் அதை விட்டு
விட்டு இதுதான் காதல் என்று கூறுங்கள் இவர்களின்
அன்பைப் பார்ப்பவர்களே . .
No comments:
Post a Comment