Wednesday 27 April 2016

இமை

உன்னை விட அழகு உன் இமை தானடி
உனக்கும் அது பெருமையடி.

அடிக்கடி துடிப்பது போல் என்னை
அழைக்காமல் அழைக்குதடி....

உன் இமைக்குள் நான் விழியாக
வர மனசும் தவிக்குதடி....

அது முடியாது என்பதால் உன்
இமை கொண்டு நான் போர்வை
யாகப் போர்த்த உன் அனுமதி தேவையடி.....

குயிலுக்குப் போட்டியாக கருமை நிறத்தில்
இமை உனக்கு மட்டும் ஏனடி..

உன் இரு இமையும் இணைவது உயிர்
இணையாக எனக்குத் தோணுதடி....

இணைந்த இமை திறக்கா விட்டால்
அதுதான் இறுதியடி....

அப்போதும் உனக்கு அது அழகுதானடி
நான் மட்டும் ரசிக்காமல்
நின்று தவிப்பேனடி...

     

No comments:

Post a Comment