ராஜா எங்கிறான்
ராஜாங்கம் கொடுப்பேன் எங்கிறான்.
ராத்திரிப் பொழுதுக்கு
ராகம் பாட வா என அழைக்கிறான்.
மந்திரி எங்கிறான்
தந்திரி இல்லை எங்கிறான்.
மாந்திரிகம் செய்யப் போவதில்லை.
அமர்ந்திரி வந்து என்னோடு எங்கிறான்.
எவன் எவனோ எதை எதையோ சொல்லி
எனை அழைக்கிறான்.
எதுகும் சொல்லாது உன் மௌன மொழியே
என்னை மயக்குதடா.
கண்டுக்காது நீ விட்டு விட்டு ஒதுங்குவது
கண்டு கலங்குகின்றது கண்ணுமடா.
உறவும் இல்லை பிரிவும் இல்லை
உனக்காக என் மனம் புலம்புகிறது நின்று.
பனிக்காற்றும் வந்து கொல்லாது
பனிப்போர் செய்து குளிர்த் தொல்லை கொடுக்குது.
நெருப்பாக நீ எரித்தாலும் உனை
நெருங்கவே நெஞ்சம் ஏங்குது.
தாங்காது இந்த பூவை மனம்
புரியாதது போல் பிரியாதே அன்பே என்
பிரியத்தைப் புரிந்து வந்து நில் என் முன்பே.
No comments:
Post a Comment