Tuesday 26 April 2016

ரதி தேவி

அடியே ரதிதேவி நீ தான் பிரம்மனுக்கு
படைக்கும் தொழிலுக்கு அங்கிகாரம்
வாங்கிக் கொடுத்தவளோ.

உன்னைப் படைத்த மறு கனமே மயங்கிய
காரணத்தால் தான் உன் கண்ணில்
வைத்தானோ திஷ்ரி  பொட்டாகக் கருவிழியை .

அடடா உன்னைச் செதுக்கிய மயக்கத்தில்
தான் அவன் படைப்பு  வேலையிலும்  சில தவறு
விட்டானோ அங்க. வினமாகப் படைக்கானோ
மனிதர்கள் முதல் மிருகம் வரையும் .

அலைமகள் மலைமகள் கலைமகள் மூவரின்
சிரிப்பினையைத் திருடிச் செய்த சிப்பமா
நீ இல்லை  கடல் அன்னையின் அன்பில்
கிடைத்த சிப்பியை  சுரண்டி செய்த
சிப்பமா நீயடி  பெண்னே.

பிரம்மனும் கொஞ்சம் ஓர வஞ்சனை உடைய
ஆண்தான் உனனைப் பார்த்ததும் அறிந்தேன்
நான் என்னிடம் இல்லையே இந்த அழகு.

திருமாலின் கையில் உள்ள தாமரைத் தண்டை
தானமாக வாங்கிச்  செய்தானோ உனக்கு விரல்
உன் அழகில் பொன் அழகும் மங்கியதால்
பெரும்  ஏமாற்றமடி நட்சத்திரத்துக்கு .

உன் தலையில் உள்ளது பனி மலையில் படர்ந்த
பனிமலரா இல்லை நீரில் மூழ்கி  மொட்டு விட்ட
அல்லி மலரா  முத்து முத்தாய் மழை நீர் எடுத்து செய்த
முத்து  மாலையா இல்லை அன்னப் பறவையின் காலில்
சிக்கிய குண்டு மணியா

உன் உடலுக்கு உடை கொடுத்தது வான்
மேகமா இல்லை தரை மயிலா இத்தனை
அழகையும் மொத்தமாக திரட்டி உன்னைச் செய்த
பிரமன் அன்றே இழந்து இருப்பான் அவன்
உறக்கத்தையடி  ரதிதேவியே ......///

      

No comments:

Post a Comment