உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி ஏப்ரல் மாதம் 2016
----------------------------------------------------------------------------------
தலைப்பு - பாட்டெழுதும் பாவலன் கை
12
பாட்டெழுத வந்தேன் பாவையர்
என் கரங்கலாளே. 
பார்த்த மட்டிலே சிரித்துக் கேலி 
செய்தனர்  பாவலர் மன்றத்துப் பாடல் ஆசிரியர்.
சிலரின் கூற்ரோ அகப்பை பிடித்த கரங்கள் கவிதை 
பிடித்து பாடல் சமைக்கப்போகின்றதாமே என்றனர்.
இது என்றோ நடந்தவை இன்று நினைக்கும் 
போது எனக்குள்ளே எடுக்கின்றது கவியூற்று.
நுழைந்து ஓடும் காற்றுக்கு துழை விழுந்த வழி மூலம் 
இசை கொடுப்பபை இறந்த மூங்கில்களே.
கம கம என மணக்கும் நெய்யும் ஒழிந்திருப்பதும்  
கறந்த பாலிலே அது சுரப்பதோ செங்குருதியிலே.
இறந்த மூங்கில்  என்று இருப்பிலே போட்டால் 
இன்ப இசை உன்னை நாடி வந்து விடுமோ,?
வாடைக்குருதியின் வழியே கிடைத்த பாலில் 
இருந்து பிரிந்த நெய் என்று நீ கூறி முகம் சுழித்து 
நெய்ப்பதாத்தம் உண்ண மறுத்தால் நெய்யின் சுவையை
உன் நாவு அறிந்திடுமே,?
அகப்பை பிடித்த கரங்கள் என்று நீ தடுத்தால் 
அக் கரங்களும் அடுக்கு மொழியில் பாடல் எழுதிட 
எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி விடலாமோ.
வடக்கு நோக்கி வணங்கினால் தவறு
கிழக்கு நோக்கி தூங்கினால் நன்மை
என்று இடக்கு முடக்கான கதைகளைப் பேசியே  
உலகை மடக்கி ஆழத் துடிக்கும் மடையர்களே.
பாட்டு ஒன்று நான் எழுதினால் அதில் பாதி வரி 
பாரதி வரிகலாக வந்து உன் கழுத்தை நெரிக்குமடா.
மீதி வரிகள் வள்ளுவனின் காமத்து வரிகலாக வந்து 
உன் காமத்தைப் பதம் பார்க்குமடா.
பாட்டு எழுத தேவை பாடசாலை இல்லையடா 
பார்க்கும் நிகழ்வுகளிலே பாடல் பிறக்கும். 
காதல் கன்னியின் வரிகளிலே காந்தம் கலந்திருக்கும்.
கவலைக்காரன் பாடலிலே கண்ணீர் இசை இருக்கும்.
 
உணர்ந்து எழுதினால் எழுந்து நகர பாதம் மறுக்கும்.
செவி கொடுப்போருக்கு கவலை பறக்கும் .
அவைதான் பாடலடா அது அடுகளளை பெண்ணாலும் 
எழுத இயலுமடா பாவையர் கரங்களும் பாட்டுப் புனையுமடா.
No comments:
Post a Comment