Saturday 30 April 2016

வலைப்பூ

நீ யாரோ நான் யார அறியேன் ஆனால்
வளைத்துப் போட்டது வலைப் பூக்கள்
அறி முகம் மட்டும் வைத்துக் கொண்டு
வலைக்குள் மாட்டியது நமது அன்பு .

நூல் கொண்டு பின்னாத வலைப் பூக்கள்
தடைகள் பல வந்தாலும் கணினியைத்
தட்டித் தட்டிப் பேச வைக்கும் வலைப் பூக்கள்
வாசணை இல்லாது போனாலும் பாசமாக
உலகையே தன் வசம் எடுத்த பூக்கள்   .

ஆண்கள்  பெண்கள் வேற்றுமை இன்றி
தன் நினைவில் சூடிக் கொள்ளும் பூக்கள்
சிரமமும் கொடுக்கும் சிரிப்பும் கொடுக்கும் .

வீட்டில் திட்டும் வாங்கிக் கொடுக்கும்
புது தென்பும் கொடுக்கும் கனியாத
கணினிக்குள் கலையாத வலையாக 
வலைப்பூக்கள்  .

கவிஞர்களின் கவிதைகளையும்
கலைஞர்களின் கதைகளையும்
கில்லாடிகளின் கிலு கிலுப்புக்களையும்
அருளானந்தத் தாண்டவங்களையும்
ஆங்கில நடனங்களையும்
பல கிசு கிசு செய்திகளையும் .

இவைகளை விரித்த வலையில்
சிக்க வைத்து காட்டிக் கொடுக்கும்
வலைப்பூக்கள் மாற்றங்கள் பல
வந்தாலும் மாறாமல் வளர
வேண்டும் வலைப் பூக்கள்.

  
   

No comments:

Post a Comment