என்ன என்ன
வார்த்தைகளையோ
நான் எப்படி எப்படியோ
அள்ளித் தெளித்தேன்.....\
சொன்ன வார்த்தை
அத்தனையும் உன்னை
சென்றடைய வில்லை
என்று எண்ணித் தவித்தேன்....\
சொர்க்கமாய் உன்
உறவை நினைத்தேன்
சொந்தமாக உன்னை
நினைத்தேன்............\
சொக்கி சொக்கி
உள்ளே மகிழ்ந்தேன்
சோகத்தில் இன்று
நின்று தவித்தேன்.......\
உன்னால் வார்த்தை மறந்தேன்
வாழ்வை வெறுத்தேன்
இறப்பை தேடி ஓட துணிவு
இன்றி தனிமையிலே தவிப்பை
ஏற்று நின்றேன் ......\
No comments:
Post a Comment