Thursday 7 April 2016

அழகோவியம்

பொன்னில் செய்த மங்கையா
பூவில் இருந்து உதிர்ந்த இதழா

தேனும் தினை மாவும் திருடிச்
செய்த உடலா
இவள் உடை பட்டு நூலா

இல்லை மயில்
தானம் கொடுத்த இறகா
இவள்
தலையில் கருமேகம் தவறி விழுந்ததா
இல்லை தானாக விழுந்து தவம்
என ஒட்டிக் கொண்டதா

இது என்ன
கண்ணா  இல்லை  அமாவாசை
நிலவா
சுத்தி இருப்பது இமையா
இல்லை தென்னங் கீற்றா

பட படவென அது அடிப்பது காற்றில்
தென்னங் கீற்று அசைவது போல் உள்ளதே

அவள் சிரித்தால்  தனி அழகு
கடல் அலை விரியும் போது
தோன்றும்  வெள்ளை   நுரை
போல் பல்அழகு 

அவள் காலில்
ஒட்டிக் கொண்ட கொலுசும்
சிணுங்க மறந்து மௌனம்
காக்கிறது அவள் உடலில் ஒட்டிக்
கொண்ட மயக்கத்தில் தன்னை  மறைந்து

           

No comments:

Post a Comment