Wednesday 30 March 2016

சாதி வெறி கொடுமை

மன்னிக்கும் குணம்
சேர்த்து அணைத்து வாழும் குணம்
இரக்க குணம்
இத்தனையும் நிறைந்தவை தான்
தமிழ் இனம்  தமிழ் நாடு பேரு
அங்கே எல்லாம் தலை கிழாகப்
போனதைப் பாரு.

அறுத்தெறியும் மனம்
அரக்க குணம்  அராஜகம்
நிறைந்து விட்டது அங்கே
இந்தியாவில் எப்போதும்
இந்த நிலைதான்  என்ற
கதையைக் கேளும்.

சாதிப் பசி மூலமுடுக்கெல்லாம்
சுவைச்சாறாகின்றது இளசுகளின்
இரத்தமே   எப்போதும் .

வெள்ளை  வேட்டி நல்ல தமிழ் உச்சரிப்பு
நயமான. பேச்சு  நல்ல மனிதர்கள் என
பெயரும் புகழும்  இந்தக் காட்சி  எல்லாம்
வெளிப்பார்வைக்கு மட்டும்.

மட்டம்  தட்டுகின்றது பிற  நாடு
மார்வு தட்டும் தமிழனின் நடவடிக்கையை
பார்த்து  குரல் கொடுக்கிறது நிறுத்தும்
படி அதையும் கொஞ்சம்  கேளும்.

அருவாள்  தூக்குபவன் எல்லாம்
உயர்ந்த சாதி என்று சுமந்து
பெற்றவள் சொன்னாளோ சபை தனில்
வந்து நின்று அது இல்லாத போது நீ
மட்டும் உயர்ந்த சாதி என்று உறுதி
படுத்த இயலுமோடா என்றும்.

உனக்கு பெயர் இட்டவன் உயந்த
சாதியாக இருந்தால் மட்டும் நீ
உயர் சாதியாகி விடலாமோடா?

சாதிகள் இல்லையடி பாப்பா என்று
பாடிய பாரதியார் பிறந்த நாடு
சாதி வெறியோடு அழைவதைப் பாரு.

சாதி போதை குருதியோடு மோதி
ஓடுகின்றது மடையர்களின் உடலிலே
சாக்கடை போல் தேங்கி விட்டது
மனம் மனிதம் மறந்து  சாதிக் கொலையே
மருந்தாகவும் விருந்தாகவும் போனது.

பத்து மாதம் சுமந்தவள் பதறுகிறாள்
தோள் மேல் சுமந்த தந்தை கதறுகிறார்
இரண்டுக்கும் சம்மதம் இல்லாத கச
போக்கிரிகள் துரத்தி வெட்டிக்
குபிக்கின்றார்கள் .

சாதி என்பது இறைவனால் கொடுக்கப்பட்டவை
இரண்டு மற்றவையெல்லாம் மனிதனால்
வகுக்கப்பட்ட அநீதி  அதை உடைத்தெறிந்து
வெளியே  வரத் தேவை மன உறுதி.

                 

No comments:

Post a Comment