Wednesday 30 March 2016

விடை தேடுகின்றேன்

காதல் கவிதை
எழுதுபவன்
காதலிப்பவன்><இல்லை!

காதல் தோல்வியைக்
கிறுக்குபவன்
அத்தனைபேரும்
அனுபவித்தவனும்<>இல்லை!

காமத்தை விபரிப்பவன்
அதற்கு
அடிமையானவன்<>இல்லை!

காதலைப் போற்றுபவன்
அதில் வெற்றி
கண்டவனும்<>இல்லை!

தாயைப் போற்றி
எழுதுபவன் அத்தனை
பேரும் தாயின் பாதம்
பணிந்தவனும்><இல்லை!

தாய்ப்  பாசத்துக்கு
மதிப்புக் கொடுப்பவனும்
இல்லை!

தாய்தான் உலகம்
என்று வாழ்பவனும்
உண்டு தாயைத்
தெய்பமாக மதிப்பவனும்
உண்டு!

சமுதாய அவலங்களை
எல்லாம் எழுதுபவன்
அதற்காக அவனை
அற்ப்பணித்தவனும்><இல்லை!

இயற்கையை விபரிப்பவன்
எல்லாம் அதைக் காற்க
முயற்சிப்பதும் <>இல்லை!

தந்தையைப்
போற்றுவபன் எல்லாம்
தந்தை சொல்லை
மந்திரமாக எடுத்துக்
கொண்டவனும்><இல்லை

ஒரு கவிஞன் பல
தரப்பட்ட
அம்சங்களையும்
இம்சைகளையும்
திறம் படக்  கொடுப்பதே
அவன் சிறப்பு!

அதற்காக அவன்
அத்தனையும்
அனுபவிக்கவேண்டும்
என்று அர்த்தம்<>இல்லை!

எதைப் பற்றி எழுதினாலும்
சிலர் சிந்திக்காமல்
அருமை சூப்பர் என்று
கருத்திடுவார்கள்!

காதலைப் பற்றி
எழுதினால் மட்டும்
பல கேள்விகளைத்
தொடுப்பார்கள்!

யாரைக் காதலிக்காய்
காதல் ஏமாற்றமோ
நம்மை பற்றித்தான்
இவள்(இவன்) கவி
வடிக்கானோ (ளோ)என்று
பல சந்தேகங்களும்.

பல புரியாத கருத்துக்களும்
பல  மாதிரியான வினாவையும்
எழுப்பி மனதில்  ஒரு வித வலியைக்
கொடுப்பதும்   வளரும்
எழுத்தாளனை முளையிலே
தடுப்பதும் கெடுப்பதும்
ஏன்  ஏன்  ஏனோ??????

      

No comments:

Post a Comment