தோழியே அழுகை
உமக்கு ஒரு தொழுகையடி .
ஆனால் அவை தான் எனக்கு
முதல் எதிரியடி ..../
நாம் நாமாக இருக்க விடாது
பல தடைக் கற்களைக் கொண்டு
நட்டு விடுமடி .....///
முதல் கட்டமாக நம்
தைரியத்தை புதைத்து
விடும் கண்களால் வடியும்
உப்பு நீர் எம் பிடிவாதத்தை
குப்புறத் தள்ளி விடும் ...//
நம் பலத்தைக் கொன்று
பலவீனத்தை வளர்த்து விடும்
சோகத்தில் மூழ்கி விட்டால்
இருள் அறைக்குள் தள்ளி
இரு கதவையும் இறுக்கப்
பூட்டி விடும் ........////
உன் சோர்ந்து போன முகம்
கண்டு நானும் சேர்ந்து அழும்
நிலை வந்து விடலாம்
தலை மேல் கவலைகளை தூக்கி
வைத்து விட்டால் புத்தி மளிங்கி
வெற்றி கை நழுவி விடலாம் ....///
இத்தனை கெட்டவைகளின்
வருகைக்கு உன் அழுகையின்
தொழுகை தான் காரணம் என்றால்
ஒத்துக் கொள்வாயோ தோழியரே...//
இன்று முதல் அழுகையை
நிறுத்தி விடு அடுத்த கட்ட
நடவடிக்கையை கையில்
எடுத்து விடு .......////
No comments:
Post a Comment