Wednesday 30 March 2016

ஏக்கத்தோடு எதிர்பார்ப்பு

உண்மையை  உரைத்து
நன்மையைப் புரிந்து
நெஞ்சை நிமிர்த்தி நின்று விடு!
ஊக்கத்தை  கையில் எடுத்து
உன் வெற்றியை அடைந்து விடு!

உன்னையும் உண்மையையும்
உணராத நட்பை தட்டி விடு!
முயற்சியை முடிவாக்காமல்
உலகத்தில் உலாவ விடு!

சிறுக சிறுக சிந்தித்து
செயல் பட்டு விடு!
மறக்க முடியாத சோகத்தையும்
மாற்ற எண்ணி வென்று விடு!

நல் அறிவுரைகளை
ஏற்று விடு!
தீய வழி தானாகவரும்
தீன்டாமல் விலகி விடு!

கடமை கன்னியம்
மறவாத ஆட்சி புரிந்து விடு!
பல நாடு வியற்கும் வண்ணம்
நாட்டின்  நலத்தையும் வீட்டின்
வளத்தையும் வளர்த்து விடு!

நல்லவையை நாசம்
பண்ணி விடும் செயலுக்கு
தடை பிறப்பித்து விடு!
நல்ல பல திட்டங்களை
அறிவித்து விடு!

செல்வமும் புகழும் போதும்
என்று நினைக்கும் அரசியலை
மறந்து விடு!
சென்ற இடமெல்லாம் சிறப்பான
மனிதன் என்னும புகழைப்
பெற்று வென்று  விடு!

ஏழை எளியோரை மதித்து
மனித நேயத்தை வளர்த்திடு.!
ஏற்று மதி இறக்குமதி என
பல அவிபிரித்தி மூலம்
ஏழை மக்களையும் சிரிப்போடு
வாழ வழி வகுத்திடு!

உன் மக்கள் மனதில்
மட்டும் இல்லை உலக
மக்கள் மனதிலும்
உன் நினைவை நிரந்தரமாகப்
பதிய வைத்து விடு!

 

No comments:

Post a Comment