Wednesday 30 March 2016

சாதி

சாதி என்னடா சாதி
விடுதலை இயக்கம்
என்று ஒன்று உருவானது
இலங்கையிலே அன்று முதல்
மறுக்கப்பட்டது மதம் புதைக்கப்பட்டது
சாதி தமிழ் மொழி  பேசும் மக்கள்
அனைவரும்  ஒன்று  என
இணைக்கப்பட்டது.

ஆண் பெண் வேதம் அறுக்கப்பட்டது
உயர் ஜாதி கீழ் ஜாதி எனறு  நோக்கும்
பார்வை சிதைக்கப்பட்டது சாதி
என்றால் ஆண் பெண் மட்டுமே
என்ற கோட்பாடு  நிறுவப்பட்டது.

ஆல மர நிழலுக்கும் நாட்டாமைக்
கூட்டங்களுக்கும் சும்புக்கும் வேலை
எங்க நாட்டில் வந்ததேயில்லை.

சந்திக்கு சந்தி நின்று வெள்ளை
வேட்டிக் கள்ளனுங்க யாரும் சாதி
பற்றி கூட்டம் போட்டு கூக்குரல்
எழுப்பியதேயில்லை.

தமிழர்களால் ஒட்டு மொத்தமாக
ஒதுக்கப்பட்ட இனம் மொழி என்றால்
அது சிங்கள இனத்தவர்களே அப்படி
இருந்தும் தமிழ் பெண்ணையோ
தமிழ் ஆண்களையோ கரம் பிடித்து
தமிழனோடு ஒன்றிப்போன சிங்களவர்களுக்கு
என்றுமே கெடுதல் புரிந்ததேயில்லை.

எங்கள் நாடும் பல மொழி பல சாதி
மக்கள் வாழும் நாடுதானடா ஆனால்
தமிழ் நாடு பேரு தமிழனுக்கான
பகுத்தறிவு இல்லாத நாடு சாதி
வெறி பிடித்தாடும் பேய்க் காடு.

நீ எளிய சாதியாடி அதனால் தான்
சாதி மதம் பார்க்காதே என்று
பரிந்துரைக்கின்றாய் கவி வரிகளாலே
என்று வரிஞ்சி கட்டி நின்றான் ஒரு
பொறம் போக்கு  என் உள் பெட்டியிலே
வருகை தந்து.

அட தறுதல நல்லாக் கேளடா சாதி
பார்க்கா நாடடா இருந்தும் என்
சாதிக்கு முதல் இடம் உண்டடா.

வள்ளலார் சாதி காளிங்கா சாதி
சட்டி குடியான் என்று இலங்கை
தமிழில் உரைப்பார்கள் உங்கள்
தமிழில் சொல்ல வேண்டும் என்றால்
மார்வு உயத்தி நாட்டாம பரம்பரை
என்று உரைப்பீர்களே அந்த வழி
வந்தவளடா நான் ஆலயத்திலும்
எனக்கு  என்று ஒரு இடம் உண்டுடா
புண்ணாக்கு  .

இந்த சாதி வெறி எனக்கில்லையடா
இவைகளைத் தாண்டி ஒரு சாதி உள்ளதடா
அதுதான் மனித சாதி நான் அதைச்
சேர்ந்தவளடா.

போங்கடா பைத்தியங்களா
நீங்களும் உங்க சாதி வைத்தியமும்.

                

No comments:

Post a Comment