Wednesday 30 March 2016

இது உண்மை

சொல்லிக் கொள்ளும் அளவு ஏதும்
உரையாடவில்லை ஆனால் நெஞ்சை
தொட்டு விட்டுப் போகின்றது உன்
உரையாடல்  .

வெள்ளரிப் பிஞ்சு போல் வெதும்மி
வாடிய நெஞ்சம் பொங்கி எழும்
கடல் நுரை போல் பொங்கி மகிழ்ந்தது
அப்போ  வஞ்சி அவளின் நெஞ்சம்
கொஞ்சம் .

அவள் நெஞ்சினிலே வடுக்களுக்கோ
குறைவில்லை அதை அழித்து மறைக்கவே
கிடைத்த சொந்தம் நீ என்று எண்ணியது
அவளது நெஞ்சம் நம்பியதால் மிஞ்சியதோ
துக்கம்  தான் கொஞ்சம்.

     

No comments:

Post a Comment