சொல்லிக் கொள்ளும் அளவு ஏதும்
உரையாடவில்லை ஆனால் நெஞ்சை
தொட்டு விட்டுப் போகின்றது உன்
உரையாடல் .
வெள்ளரிப் பிஞ்சு போல் வெதும்மி
வாடிய நெஞ்சம் பொங்கி எழும்
கடல் நுரை போல் பொங்கி மகிழ்ந்தது
அப்போ வஞ்சி அவளின் நெஞ்சம்
கொஞ்சம் .
அவள் நெஞ்சினிலே வடுக்களுக்கோ
குறைவில்லை அதை அழித்து மறைக்கவே
கிடைத்த சொந்தம் நீ என்று எண்ணியது
அவளது நெஞ்சம் நம்பியதால் மிஞ்சியதோ
துக்கம் தான் கொஞ்சம்.
No comments:
Post a Comment