சிவனுக்கு முந்திய பிள்ளை.
சிவனுக்கே தனையன் ஆன பிள்ளை.
உமயவளின் பிடி மண்ணில் அவதரித்த பிள்ளை.
தாய்க்குத் தலை மகன் என்று பெயர் பெற்ற பிள்ளை.
பூஜை நமஸ்காரத்துக்கு முதல் இடம் எடுத்த பிள்ளை.
முதல் முதல் கடவுள் என சித்தி அடைந்த பிள்ளை.
சந்திக்கு சந்தியென ஆலமர நிழலில் அமர்ந்த பிள்ளை.
தாயைப் போல் துணை காத்திருக்கும் யானை
முகப் பிள்ளை.
அம்மை அப்பன் உலகம் என உணர்த்திய பிள்ளை.
எரிக்கம் பூ மாலையை விரும்பிய பிள்ளை.
அறுகம்புல் மேலே அமரும் பிள்ளை.
அந்தப் பிள்ளை எந்தப் பிள்ளை.
உமயவளின் செல்லப்பிள்ளை.
பிள்ளையார் என்று பெயர் பெற்ற பிள்ளை.
No comments:
Post a Comment