Sunday 6 March 2016

அன்பின் வீரியம்

ஏய் இடி தாங்கும் வான் மேகமே
அலை அடி தாங்கும் கடல் தரை
மணலே  உங்களை விட என்
நெஞ்சம்  வீரியம்  ஆனதுதான்
என்று ஒவ்வொரு  தடவையும்
உணருகின்றேன் நின்று.

செல் போல் சொல் வந்து தாக்கும்
போதும் தாங்கும் என் நெஞ்சம்
கண்டு  பெருமை கொள்கின்றேன்
நான் இன்று.

வெட்கம் தோனவில்லை துக்கம்
அதை தாண்டியதால் உப்புக்
கடலுக்கு நான் எதிரி இல்லை
ஆனாலும்  அதற்குப் போட்டியாக
உப்பு நீர் சுரக்கின்றது என் விழி
இரண்டும் மனக் குமுறலின் திரு
விளையாடளினால்.

விடை கொடு விடை கொடு என்று
என் மூச்சுக் காற்று வேண்டுகோள்
விடுகிறது மாட்டேன்  மாட்டேன்
என்று என் ஆசை மனம் தடை
போடுகின்றது.

இவை ஏன் என்று உமக்குத்
தெரியுமா ஒரு தடவையாவது
உன் தோள் சாய வேண்டும்
என்ற ஆதங்கம் எனக்குள்ளே
தொடர்கின்றது.

இவைகளால் தான் உன் வெறுப்பு
வார்த்தை நெருப்பாக வரும் போதும்
என் மனம் இடி தாங்கியாக மாறுகின்றது
இது அன்பின் வீரியம்  விரைவில்
நொறுங்கி விடாது.

           

No comments:

Post a Comment