Wednesday, 30 March 2016

வலி

நீ நெருங்கி நெருங்கி பழகி விலகியதால்
நொறுங்கியது  இதயம்.

நீண்டு கொண்டே போகின்றது
நினைவு  நெடும் பாதை போலவே.

நின்று  அறுக்கிறது மனதை
அருவாள் போல.

உன் திட்டம் புரியாமலே நீர்
பெருக்குது விழி.

நேசமும் பாசமும் வேசம் தானா?
இவ் உலகிலே.

என்று நானே கேள்வி எழுப்பினேன்  ஆம்
என்ற விடையே வந்து
உதித்தது மனதிலே.

ஏகப்பட்ட ஏமாற்றத்துடன் விலக்கப்
பட்டவளானேன் உன் அன்பு
கிடைக்காமலே .  :-(

 

No comments:

Post a Comment