Wednesday 30 March 2016

புரிந்து நடந்தால் நம்மையுண்டு

தன் நம்பிக்கை  இழக்காதே.
தன்மானம் காக்க மறக்காதே.

சமுதாய கேலிக் கூத்துக்கு அஞ்சாதே.
சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ தயங்காதே.

வீட்டில் விசுவாசத்தைக் காட்ட மறவாதே.
நாட்டில் விஷக் கிருமிகளைக் கண்டால்
அழிக்காது நின்று  மயங்காதே.

காரணம்  இன்றி நேரத்தை விரையம் செய்யாதே.
காரணத்துக்கான நேரத்தை தவற விடாதே.

கல் மண் போன்று வாழ நினைக்காதே.
காலத்துக்கு ஏற்றால் போல் காய் நகர்த்த
மறவாதே.

உனக்கு என்று ஒரு கொள்கையை வளர்க்க
பயம்  கொள்ளாதே.
கடவுள்  கொடுப்பான் என்று காத்திருக்காதே.

கண்டவர்களை எல்லாம் கண் மூடித்தனமாக
நம்பாதே.
கண் கெட்ட பின்னே நின்று வருந்தாதே.

கண் இருந்தும் குருட்டுத்தனமாக வாழ்கை
நடத்தாதே.
தடக்கி விழும் போதும் தாவி எழும் துணிவை
இழக்காதே.

விதி விட்ட வழி என்று துவண்டு விடாதே.
மதி கொண்டு வென்று விடுவேன் என்று
நினையாது இருந்து விடாதே.

உன்னால் முடியும் என்ற எண்ணத்தை
கை விடாதே.
உனக்குள் உள்ள ஆறாம் அறிவை உறங்க
விடாதே.

நிச்சயம்  ஒளியான வாழ்வு வரும் கலங்கி விடாதே.
நிதர்சனம் கிடைக்கும் போது மனம் திறந்து
சிரிக்க மறவாதே.

           

No comments:

Post a Comment