Tuesday 1 March 2016

வாழ்த்துக்கள்


நூதனக் கவிஞனை
கவியருவி மைந்தனை
கல்குடாவின் எழுத்தை
நண்பன் றியாஸ்சை வாழ்த்தி
விடவேஆசை......///

வாழ்த்து ஒன்று உரைக்க
வேண்டும் என்று எழுந்து
விட்டேன் எழுது கோல் கொண்டு .....////

எழுத்துக்களை வர
வழைத்து விட்டேன்
ஆனால் என்னால் வந்து
கொள்ள இயலவில்லை
அவ்விடம் நாடி அதனாலே
அனுப்பி வைத்து விட்டேன்
வார்த்தையிலே வாழ்த்துக்கள்  கோடி.....//

போற்றுவோர் போற்றட்டும்
தூற்றுவோர் தூற்றட்டும்
உன் புகழ் எவ் வழியிலும் பரவட்டும்...////

துணிந்து எழுது கோல்
பிடித்த கவிஞனே உன் காவியம்
புகழ் பிற நான் வாழ்த்துகின்றேன்.....////

நாட்டு நடப்பு வீட்டு அடுப்பு
வழியிலே கண்டு எடுத்த
பல எடுப்புக்கள் இவைகளைப்
படிப்போருக்கு கடுப்பேற்றாவாறு
கவி வடித்த கவிஞனே உன் புகழ்
வாழ்க வளர்க.....///

மட்டக்கிளப்பு மாவட்டாத்தில்
எனது ஊருக்குப் பக்கத்திலே
சிறப்பாக நாடாத்துகின்றது
தடாகம் விருதுவிழா என்று
என் உள்ளம் போடுது உலா இன்று.....///

தடாகம் இலக்கிய வட்டத்துக்கு
இலக்குகள் எப்போதும் பக்கத்திலே
வாழ்க வாழ்க தடாகத்தின் புகழ்
ஓங்கி நிலைத்து நின்று  நிலையான
இடத்தினிலே மங்காத கதிரவன் போல்
எங்கும் உன் நாமம் ஒலித்திடவே
வாழ்த்துகின்றேன் ......////

தடாகத்தின் அன்பு சின்னத்தை
அணைத்தெடுத்து செல்ல அன்போடு
வருகை தந்து நட்புறவோடு வாழ்த்த
வந்த இந்தியக் கவி உள்ளங்களுக்கும்
இலங்கை தமிழ் மகளின் வாழ்த்துக்கள் 
உரித்தாகட்டும் வாழ்க தமிழ் வளர்க
நட்புறவு மலரட்டும் அகத்தோடு சேர்ந்து
முகத்திரையும் ......////

எனது எழுத்துக்களுக்கு தன்  குரல் வழி
ஒலி வடிவம் கொடுத்து அனைவரின்
செவிகளுக்கு கொண்டு சென்ற சகோதரி
(ஹானா ஜிப்ரி)   அவர்களுக்கு நன்றிகள்.

(றியாஸ் நூல் வெளியீட்டின் போது
வாசிக்கப்பட்ட கவிதை)

   

No comments:

Post a Comment