Wednesday, 30 March 2016

என் அன்பே

என் அன்பே நீ ஏன் என்
நினைவினிலே அழுகின்றாய்
உறக்கம்  இன்றி  உணவு இன்றி
ஏன் ஏக்கம் கொள்கின்றாய்
நான் உன்னுள் தானே அன்பே
குடி இருக்கின்றேன்.

உன் இதயம் தானே என்  மாளிகை  அதை
விட்டுப் போவேனோ  அன்பே நான்.
அந்த இடம் எனக்கானதாக இருக்கையிலே
அந்த மாளிகை  இந்த மங்கைக்குடா அன்பே.

நீ கல்லறைக்கு செல்லும்  போதும்  உன்
இதய அறையில்  நான் இருப்பேனடா
உன் அனுமதி அவசியம்  இல்லாது போகுமடா
உன் மூச்சும் என்   துடிப்பும்  ஒன்றாக நின்று
விடும் போது அனுமதி எதற்குடா  அன்பே.

            

No comments:

Post a Comment