காலமும் உருண்டோடுது.
கோலங்கலும் வர்ண
ஜாலங்களாய் மாறுது.
என்னுள் நீ வந்த காலம்
தொட்டு இன் நாள் வரை
நான் மாறவில்லை .
தொடர்கின்றேன் நினைவால்
உன்னை நிழல் போலவே
தொடாமலே .
தவறாமல் அனுப்புகின்றேன்
செய்திகளை நிறுத்தாமலே.
தேய்ந்து கொண்டே போகின்றது
உன்னிடம் மட்டுமே என் நினைவு
தெரிந்து கொண்டேன் நான்.
உன் செயலிலும்
உன் சொல்லாடலிலும்
உன் அலட்சியத்திலும்
உன் நிராகரிப்பிலும்
புரிய வைத்து என் பிரிவை
நோக்கி நீ நகருகின்றாய் என்று.
No comments:
Post a Comment