வங்கக் கடல் தொடக்கம்
கண்ணீர் வரைக்கும்
அண்டமெல்லாம் சுழண்டு
வரும் வாயு தேவன் தொடக்கம்
பூமி எங்கும் ஊர்ந்து உள்ளே
நுழைந்து உள்ள நீர் வரைக்கும்
அன்னையின் கற்பம் தொடக்கம்
கட்டியவள் கற்பு வரைக்கும்
ஆராட்சி தொடக்கம் அரசியல்
ஆட்சி வரையும்.
சமுதாயப் பார்வை தொடக்கம்
சமூக அவலம் வரையும்
ஆலயப் புராணம் தொடக்கம்
அன்னை இல்லம் வரையும்
இயற்கை தொடக்கம்
செயற்கை வரையும்.
காதல் காமம் தொடக்கம்
காதல் வலி காதல் பிரிவு
வரைக்கும்
மழலையின் சிரிப்பு தொடக்கம்
மரணத்தின் அழுகை வரைக்கும்
தூவானமாக தூறும் மழை தொடக்கம்
அதிர்ந்து இடித்துத் தள்ளும் பூகம்பம்
வரைக்கும்
உலகுக்கு தன் பேனா முணை மூலம்
கவி வடிவில் புரிய வைக்கும்
எழுத்தாளர்களே
அகந்தையை அழிக்க அறியாமையை
தகக்க அறிவை வளர்க்கப்
சிறு கவி வரிகள் மூலம் முயன்று வரும்
கவிஞர்களே
என்றும் உங்கள் ஆக்கங்கள்
முயற்சிகள் சிறக்க மணக்க என்
மனமார்ந்த வாழ்த்துக்கள்.....\
முடிவு இல்லா உலகில் பறி போகாத
செல்வம் கல்விச் செல்வம் அதை
நீயாக விரும்பி அள்ளிக் கொடுக்கையிலே
நிகர் இல்லாச் செல்வம்.......\
No comments:
Post a Comment