Tuesday 15 March 2016

என் கற்பனை

வறண்ட மண்ணிலும்,
விதையாய்  முளையிட
துடிக்கிறேன்! பட்ட மரத்தில் ,
பூவாக மலர நினைக்கின்றேன் .

கும்மிருட்டிலும் வெளிச்சம், தேடி ,
அழைகின்றேன் புயல் காற்றிலும்
பூங்  காற்றை தழுவ  ஆசை
வைக்கின்றேன் .

தீயினுள் பனிக்கட்டிதனை,
பிடுங்க  ஆவல்  படுகின்றேன்
மழைக்கு  பின், வரும் வான
வில்லை வளைத்துப், போட
ஆசை வைக்கின்றேன் .

சுனாமி பேரலைக்கே கடி '
வாளமிட்டு அடக்கிவைக்க
துடிக்கினறேன்  பெற்றோரின்
நல்லுரைகள்,ஆயிரம் கேட்டும்
நகராத, எனக்குள் தான்
எத்தனை "ஆமை போல்
நகரும்  கற்பனைகள் .

        

No comments:

Post a Comment