வறண்ட மண்ணிலும்,
விதையாய் முளையிட
துடிக்கிறேன்! பட்ட மரத்தில் ,
பூவாக மலர நினைக்கின்றேன் .
கும்மிருட்டிலும் வெளிச்சம், தேடி ,
அழைகின்றேன் புயல் காற்றிலும்
பூங் காற்றை தழுவ ஆசை
வைக்கின்றேன் .
தீயினுள் பனிக்கட்டிதனை,
பிடுங்க ஆவல் படுகின்றேன்
மழைக்கு பின், வரும் வான
வில்லை வளைத்துப், போட
ஆசை வைக்கின்றேன் .
சுனாமி பேரலைக்கே கடி '
வாளமிட்டு அடக்கிவைக்க
துடிக்கினறேன் பெற்றோரின்
நல்லுரைகள்,ஆயிரம் கேட்டும்
நகராத, எனக்குள் தான்
எத்தனை "ஆமை போல்
நகரும் கற்பனைகள் .
No comments:
Post a Comment