Friday, 25 March 2016

இது என்ன கொடுமை

படம் பதவி பகட்டு பாராட்டு
விருது விமர்சனம்  பொன்னாடை
புகழாரம்  பலருக்கு கிடைக்கின்றதே
இவர்கள்  எல்லாம்  தரமான கவிஞர்களா?
எனக் கேட்டால்.

உடனே பதில் வர மறுக்கின்றது
தலை கீழ் நோக்கி  சாய்கிறது
பதட்டம் பிறக்கின்றது
சாக்குப் போக்கு வார்த்தைகள்
வருகின்றது.

சாதிச்ச கவிஞர்களைக் கேட்டால்
இக் கேள்வியை சாட்டை போல்
பதில் பிறக்கும் விளக்கொளி போல்
விளக்கம்  கிடைக்கும் தன் நம்பிக்கை
அதற்குப் பரிசாகக் கிடைக்கும்  கவியின்
புகழ் சிறக்கும் தரமான போட்டியாக
நிறைவு பெறும்.

முகநூல்  கூத்தைப் பார்க்கையிலே
கவி மேதை கண்ணதாசன்  கவி வரி
நினைவில் வருகின்றது 
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும்
வேறு பாடு தெரியலே முகநூலில்
விளக்கம்  கொடுக்கத் தெரியாத
விளக்கெண்ணெய் எல்லாம் கவிஞனாம்
முகநூல்  அரங்கிலே.

      

No comments:

Post a Comment