Saturday 12 March 2016

ஒரு தலை காதல்

நீண்ட நேரம் தூங்கி எழ
ஏங்கிய நாட்கள் பல .

தூக்கம் என்னை
நெருங்காத வாறு
இருந்தவை ஒரு பெரும் கத.

சுமை தாங்கிய இதயம்
இன்று இறக்கி விட்டது
சுமைகள் சில.

வெறுத்த தூக்கம்
நெருங்கி வந்து விட்டது மனம்
மாறிய மனைவியைப் போல.

கண்கள் நீர் வடிப்பதை
நிறுத்தி விட்டது .

இன்ரோடு. அவனுக்காக
கவிதை எழுதுவதில் இருந்து
விடுதலை பெற்று விட்டது
விரல்களும் கூட.

பூவை நான் பூச்சூட அனுமதி
இன்றி வாழ்ந்த ஆண்டு
எத்தனையோ.

இன்று வண்ண மலர்கள்
என் மேல் அமர்ந்து விட்டதே
இவை எப்படியோ.

நீண்ட பெருமூச்சை
இழுத்து விட்டு விட்டேன்.

நிம்மதியான உறக்கத்தை
தொட்டு விட்டேன்.

இனிமேல் அவன் எண்ணம்
என்னைக் குட்டி எழுப்பாது .

அவன் முகம் கனவில் தோனாது.
அவன் நினைவில் கலங்கும் கண்
இமை திறக்காது.

கண்ணீர் துடைக்க கை துடிக்காது.
நீண்ட கவி வரிகள் உங்களை
நாடி வந்து தொல்லை கொடுக்காது.

என் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
ஆசைக்கும்  வேதனைக்கும் 
விடுதலை விடுதலை.

கொண்டு செல்கின்றேன்
என்னோடு உன் மீது உருவான
ஒரு தலைக் காதலை.

   

No comments:

Post a Comment