Wednesday 30 March 2016

புரட்சிக் கவிதையா??

ஒரு புரட்சிக் கவிதை வேண்டுமாம்
உன்னால் முடியுமா? என்று ஒரு சாவால்
விடுகின்றான் என் திறமைக்கு திறவு
கோலாக ஒரு உறவு அது புது வரவு...../

புரட்சி மண்ணில் விருட்சமான புரட்சி
தமிழச்சி நான் என்று அறிய வாய்பு
இல்லை அவனுக்கு என்று நான்
நினைக்கின்றேன்  இன்று....../

வடிந்த குருதி கண்டு கலங்கிய விழி
இரண்டும் மறி நொடி அனல் பறக்க
முறைத்துப் பார்த்த நாட்கள் எத்தனை
என்று சொலி விட முடியுமா  ?உன்னால் .../

சரிந்து விழுந்த தமிழரின் சரித்திரத்தைப்
படைக்க விரல்கள் துடிப்பதை எடுத்துச்
சொன்னால் உமக்கு  புரியுமா? ...../

வெடித்துச் சிதறிய( செல் ) பாகங்களுக்கு 
தன் பிள்ளையை மட்டும் இல்லை சரிந்து
விழுந்த தென்னம் பிள்ளையைக் கண்டும்
கதறி அழுதார்களே  ஏழைகள் அந்தக்
கண்ணீர்க்  காட்சி என் கண்ணில் தெரிகின்றதே
அது உமக்கு  தெரிகிறதா?..../

தலையணையோடு பாயினிலே
படுத்துறங்கி கண் விழிக்க ஆசைப்
பட்ட படியே அடர்ந்த காட்டிலே உறங்கி
விழித்த காலம் கடந்து போனாலும்
மறக்க வில்லை இவை உமக்குத் தெரியுமா?.../

தமிழனுக்கான தலைக் கணம்
குறையாது என்றும் இன்றும் ஆங்காங்கே
குரல் கொடுப்பதை நீ அறியவில்லையோ?../

(75)  ஆம் ஆண்டுக்குப் பின்னே பிறந்த
பிள்ளை  தாலாட்டுக்  கேட்டு உறங்கியது
இல்லை..../

வெடி ஓசையிலே தூங்கி எழுந்த
மழலைகளே   இன்று வாழ்கின்றது
இலங்கை மண்ணிலே...../

கன மழையில் நனைந்ததை விட குண்டு
மழையில் குளித்து மடிந்த இல்லங்கைளே
ஈழ மண்ணில் அதிகம்.....///

புரட்சி வார்த்தைக்கு வறட்சியே
ஏற்படாது என்றும் இலங்கை  தமிழர்
கரங்களிலே......../

         

No comments:

Post a Comment