ஒரு புரட்சிக் கவிதை வேண்டுமாம்
உன்னால் முடியுமா? என்று ஒரு சாவால்
விடுகின்றான் என் திறமைக்கு திறவு
கோலாக ஒரு உறவு அது புது வரவு...../
புரட்சி மண்ணில் விருட்சமான புரட்சி
தமிழச்சி நான் என்று அறிய வாய்பு
இல்லை அவனுக்கு என்று நான்
நினைக்கின்றேன் இன்று....../
வடிந்த குருதி கண்டு கலங்கிய விழி
இரண்டும் மறி நொடி அனல் பறக்க
முறைத்துப் பார்த்த நாட்கள் எத்தனை
என்று சொலி விட முடியுமா ?உன்னால் .../
சரிந்து விழுந்த தமிழரின் சரித்திரத்தைப்
படைக்க விரல்கள் துடிப்பதை எடுத்துச்
சொன்னால் உமக்கு புரியுமா? ...../
வெடித்துச் சிதறிய( செல் ) பாகங்களுக்கு
தன் பிள்ளையை மட்டும் இல்லை சரிந்து
விழுந்த தென்னம் பிள்ளையைக் கண்டும்
கதறி அழுதார்களே ஏழைகள் அந்தக்
கண்ணீர்க் காட்சி என் கண்ணில் தெரிகின்றதே
அது உமக்கு தெரிகிறதா?..../
தலையணையோடு பாயினிலே
படுத்துறங்கி கண் விழிக்க ஆசைப்
பட்ட படியே அடர்ந்த காட்டிலே உறங்கி
விழித்த காலம் கடந்து போனாலும்
மறக்க வில்லை இவை உமக்குத் தெரியுமா?.../
தமிழனுக்கான தலைக் கணம்
குறையாது என்றும் இன்றும் ஆங்காங்கே
குரல் கொடுப்பதை நீ அறியவில்லையோ?../
(75) ஆம் ஆண்டுக்குப் பின்னே பிறந்த
பிள்ளை தாலாட்டுக் கேட்டு உறங்கியது
இல்லை..../
வெடி ஓசையிலே தூங்கி எழுந்த
மழலைகளே இன்று வாழ்கின்றது
இலங்கை மண்ணிலே...../
கன மழையில் நனைந்ததை விட குண்டு
மழையில் குளித்து மடிந்த இல்லங்கைளே
ஈழ மண்ணில் அதிகம்.....///
புரட்சி வார்த்தைக்கு வறட்சியே
ஏற்படாது என்றும் இலங்கை தமிழர்
கரங்களிலே......../
No comments:
Post a Comment