Wednesday 30 March 2016

என்ன? ரகம்

அவன் எழுதும்
ஒவ்வொரு கவிதையும்
ஒவ்வொரு  தரம்  
ஒவ்வொரு ரகம்......\

சில கவிதை சிந்திக்க
வைக்கும்.

சிலகவிதை ஆஹ
என்று வாய் திறந்து
வியக்க வைக்கும்.

சில கவிதை இது
நிஜமோ என்ற
எண்ணத்தை இழுத்து
வந்து  நிறுத்தி  வைக்கும்

சில கவிதையைப்
படித்ததுமே நம்மைதானோ
குறிப்பிடுகிறான்
என்று கவலையில்
ஆழ்த்தி  விடும்

சிலகவிதைகளைப்
படித்ததுமே  நம்
கண்ணீரை வடிக்க
வைக்கும்.

இப்படி அவனின்
கவிதைகளின்
தரமும் திறனும்
ஒரு வியப்புக்கு
உரிய கற்பனை.

ஆனால் இத்தனை
திறன் கொண்ட அவன்
எந்த ரகம் என்றுதான்
நான் அறியா முத்திரை
இதனால் இழந்தேன்
நித்திரை..........\

 

No comments:

Post a Comment