Wednesday 30 March 2016

வாழ்கை

வாழ்க்கையில்   பொறாமை,இருக்கிறது.
வாழ்க்கையில் வெறுப்பு இருக்கிறது.
வாழ்க்கையில் சுயநலம் இருக்கிறது.
வாழ்க்கை  வாழ ஆசைகள் இருக்கிறது.

வாழ்க்கையின்  அழகை ரசிக்க
நினைவு இருக்கு  ஆனால்
வாழ்க்கையில் வாழ்கை இல்லையே
வாழ்கையை வாங்க கடையும் இல்லையே.

வியாபாரமாகும் பொருளும் இல்லையே
வியாபாரியும்  எவரும்  இல்லையே
பாவம்  ஏங்கும் இதயம் தூங்கா விழிகள்.
வாடிய முகம்  வாட்டம்,கொடுக்கும் பார்வை.
காட்டிக் கொடுக்காத  போலி புன்னகை. 

விட்டு விட்டு  வந்து போகும் பெரு மூச்சு
இவைக்களை மறைக்கவே படும் பாடோ
பெருசாகப் போச்சு  மகிழ்வாக வாழ்கை
வாழ்வது போல் நடிப்பே வாழ்கையாக
வாழ்கின்றாள் அந்தப் பாவி மகள் .

           

No comments:

Post a Comment